Tamil Sanjikai

டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால், ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு தரத் தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் வருகிற 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை தமக்கு இல்லை என்றார்.

டெல்லிக்கு மாநில அந்தஸ்தை யார் வழங்கினாலும் அவர்களை ஆதரிக்க தான் தயாராக இருப்பதாக கூறினார். தனது இந்த கோரிக்கையை நிறைவேற்றினால் ராகுல் காந்தி பிரதமராக ஆம் ஆத்மி ஆதரவு கொடுக்கும் என்றார். ஏற்கனவே மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பிரதமரானால் ஆதரிக்க தயார் என கெஜ்ரிவால் கூறியது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment