Tamil Sanjikai

பேஸ்புக் நிறுவனம் அரசியல் சார்புள்ள ஒரு மக்கள் தொடர்பு நிறுவனத்தோடு இணைந்து தங்களது போட்டியாளர்கள் மீது அவதூறு செய்திகளைப் பரப்பியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைப் புலனாய்வு செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் விலை சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பர்க் பதவி விலக வேண்டுமென அதன் முதலீட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் அதிரிச்சையடைந்த மார்க், செய்தியாளர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார். அதில் ‘குறிப்பிட்ட நிறுவனம் பற்றி தனக்கு எந்த விவரமும் தெரியாது. நியூயார்க் டைம்ஸ் செய்தியைப் படித்தபின் எனது நிறுவன அதிகாரிகளோடு இது குறித்து விவாத்தித்து அந்த நிறுவனத்தோடு உள்ள எல்லா தொடர்புகளையும் முறித்துக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்’ என விளக்கமளித்துள்ளார்.

ஏற்கனவே கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு தகவல்களை விற்றதாக பேஸ்புக் நிறுவனம் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் இந்த குற்றச்சாட்டு பேஸ்புக் நிறுவனத்தை மேலும் ஆட்டம் காணவைத்துள்ளது.

0 Comments

Write A Comment