Tamil Sanjikai

கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சி எஸ் புட்ட ராஜுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல், வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல அமைச்சரின் உறவினர் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வருமான வரித்துறை அதிகாரிகளை கர்நாடகாவிற்கு வரவழைத்து, தேர்தல் நேரத்தில் சோதனை நடத்தி அரசியல் ரீதியாக பழிதீர்த்துக் கொள்ள பா.ஜ.க. முயற்சிக்கிறது என நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமி ஏற்கனவே பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

0 Comments

Write A Comment