உலக கோப்பையை இந்தியா அணி வென்றால், 10 நாட்களுக்கு தமது ஆட்டோவில் இலவச பயண சேவை வழங்கப் போவதாக சண்டிகரில் உள்ள அனில் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனில் குமார், நமது நாட்டுக்காக இதை செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த உலக கோப்பையுடன் கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு பெறுவதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவர் உலக கோப்பையுடன் விடை பெற வேண்டும் என்று நினைப்பதாகவும் அனில் குமார் தெரிவித்தார்.
0 Comments