Tamil Sanjikai

தற்போது இசையமைப்பவர்கள் இசை அமைப்பாளர்களே கிடையாது என இசையமைப்பாளர் இளையராஜா விமர்சித்துள்ளார்.

இளையராஜாவின் 75ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியின் நிறைவு விழாவை சென்னை ராணிமேரி கல்லூரி கல்லூரி மாணவிகளுடன் இசையமைப்பாளர் இளையராஜா கொண்டாடினார். அப்போது இசை பயணத்தின் போது நிகழ்ந்த இன்ப துன்பங்களை மாணவிகளுடன் பகிர்ந்துகொண்டார். மேலும் இளையராஜா கேக் வெட்டி ஆசிரியர்களுக்கு வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், ”அன்னக்கிளி உன்னைத் தேடுது” என்ற பாடலை தாம் மெரினா கடற்கரையில்தான் பதிவு செய்ததாகவும், இந்த தகவல் இதுவரை யாருக்கும் தெரியாது எனவும் கூறினார்.

தற்போது இருப்பவர்கள் இசை அமைப்பாளர்களே கிடையாது என குறிப்பிட்ட இளையராஜா, பாடல் என்றால் உயர்ந்த கருத்தை தெரிவிக்க வேண்டும் எனவும், உணர்வை பிரதிபலிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment