அமெரிக்க கடற்படையின் உயரதிகாரியான் ஸ்காட் ஸ்டீர்னி (Scott Stearney) பஹரைன் நாட்டில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பகுதிகளுக்கான வைஸ் அட்மிரலாக இருந்த ஸ்காட் ஸ்டீர்னி பஹ்ரைன் நாட்டு கடற்படைத்தளத்தின் பொறுப்பாளராகவும், ஹோர்மஸ், செங்கடல், அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் ரோந்து செல்லும் அமெரிக்கக் கப்பல்களின் முக்கியப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துவந்தார்.
இந்நிலையில் பஹரைன் நாட்டிலுள்ள அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். கப்பற்படை காவல்துறையும், பஹரைன் காவல்துறையினரும் இணைந்து நடத்திய விசாரணையில் ஸ்காட் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
0 Comments