Tamil Sanjikai

ஹிமாச்சலப்பிரதேசத்தில் தனியார் பேருந்து ஓன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் குலு மாவட்டம் பஞ்சாரிலிருந்து, 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கடாகுஷானிக்கு சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

0 Comments

Write A Comment