Tamil Sanjikai

பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரியில் ராணுவ வீரர்களுடன் தனது தீபாவளியை கொண்டாடினார்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்ட பிறகு, முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீருக்கு சென்றுள்ளார். அங்கு ரஜோரி எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் தனது தீபாவளி கொண்டாடப்பட்டதாகவும், தைரியமான ராணுவ வீரர்களை தொடர்பு கொண்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment