பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் 12 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (மே 10) தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த விழாவில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல், திருவிழா அமைதியாக நடைபெறும் வகையில், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்திடவும், நாளை மாலை 6 மணி முதல் 12 ஆம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments