2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விடும் தேதி மற்றும் இடத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்த்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சீசனுக்கும் ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், 13ஆவது சீசன் ஐபிஎல் போட்டியில் பங்கு பெறும் வீரர்களின் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. கொல்கத்தாவில், ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
0 Comments