Tamil Sanjikai

மும்பை சேம்பூரில் உள்ள திலக் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியில் நேற்று மாலை திடீரென தீ பிடித்து எரிய துவங்கியது, இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்க பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கீழ்த் தளங்களில் இருந்தவர்கள் வேகமாக வெளியேற்றப்பட்டனர். ஆயினும் தீ வேகமாகப் பரவியதால் பலர் கட்டடத்தின் மேல்தளங்களில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினர். எனினும் இந்த தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

0 Comments

Write A Comment