Tamil Sanjikai

தமிழகத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,௦௦௦ வீதம் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்குவதாய் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய பொருட்களும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ரூ.1000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் கோவையை சேர்ந்த டேனியல் என்பவரால் பொதுநல வழக்கு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-, " தமிழக அரசு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருமானம் உள்ளிட்ட எந்த ஒரு பாகுபாடின்றி, ரூ.1000-த்தை பொங்கல் பரிசாக வழங்குகிறது.

ஏற்கனவே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை முடிக்காத நிலையிலும், அதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படும் சூழ்நிலையிலும், இது போல அனைத்து ரே‌சன் கார்டுகளுக்கும் ரொக்கப்பரிசு வழங்கினால், அது தேவையில்லாத நிதி சுமையை அரசுக்கு ஏற்படுத்தும்.

நலத்திட்டங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கலாம். அதுகூட பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே உருவாக்க வேண்டும். அதற்காக அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்குவது ஏற்க முடியாது" " என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் , வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை விதித்தும், மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படுவது ஏன்? எஎன்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது,

மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கக்கூடாது என்றும்,வறுமைகோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் வழங்க மட்டுமே தடை விதியுள்ளதாகவும் . அரிசி, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்க தடை ஏதும் இல்லை என்றும், அறிவித்தது. இதனால், இனி வெள்ளை நிற ரேசன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இனி ஆயிரம் ரூபாய் கிடைக்காது

0 Comments

Write A Comment