Tamil Sanjikai

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சுரேஷ்கோபி, பா.ஜ.க. சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர் பா.ஜ.க கட்சியின் சார்பில் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது அய்யப்ப சாமியின் பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக திருச்சூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான, அனுபமாவிடம் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து 48 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறு சுரேஷ்கோபிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நடவடிக்கை குறித்து மாநில தேர்தல் அதிகாரி தீகா ராம் மீனா கூறும்போது, “தேர்தல் பிரசாரத்தின் போது அய்யப்ப சாமியின் பெயரையோ அல்லது வேறு எந்த கடவுளின் பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. ஆனால் நடிகர் சுரேஷ்கோபி அய்யப்ப சாமி குறித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் அவருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது சரியான நடவடிக்கைதான்” என்றார்.

0 Comments

Write A Comment