Tamil Sanjikai

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துள்ளது. காஷ்மீர் விடுதலைக்காக இந்தியாவுடன் போர் புரியவும் பாகிஸ்தான் தயாராக உள்ளது'' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவேசமாக பேசினார்.

பாக்கிஸ்தான் சுதந்திர தினமான இன்று அந்நாட்டு மக்களிடம் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: "காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட்டு தீர்வு கிடைக்க வேண்டும் என்றே பாகிஸ்தான் விரும்பியது. அது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இடம் பேசினேன். ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியா அவசரப்பட்டுவிட்டது.

காஷ்மீர் மக்களின் உரிமைக்காகவும், அவர்களின் விடுதலைக்காகவும் பாகிஸ்தான் என்றும் உறுதுணையாக இருக்கும். இது தொடர்பாக இந்தியாவுடன் போர் புரியும் சூழல் ஏற்பட்டாலும் நாம் தயார்'' இவ்வாறு அவர் பேசினார்.

0 Comments

Write A Comment