Tamil Sanjikai

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி 20 போட்டிதொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டி-20 போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் இன்று நடைபெற இருந்தது.

ஆனால், போட்டி நடைபெறும் தர்மசாலாவில் மழை பெய்ததால், மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. தூறல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், போட்டி நடத்த முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி கைவிடப்பட்டது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.

0 Comments

Write A Comment