Tamil Sanjikai

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடாக, சீன அதிபர் வருகையை முன்னிட்டு ஈ.சி.ஆர்., மாமல்லபுரம் பகுதியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் சினிமா காட்சிகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈ.சி.ஆர்., பகுதியில் உள்ள திரையரங்குகளில் நாளையும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜூஜின்பிங் மாமல்லப்புரத்தில் இன்று சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment