Tamil Sanjikai

கொல்கத்தாவில் மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா தாக்கப்பட்டது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளார்..

பணிமுடிந்து நள்ளிரவில் சக கலைஞருடன் உபேர் கால்டாக்சியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த உஷோஷி சென்குப்தாவை, வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் வழிமறித்தததாகவும் ஓட்டுநரை தாக்கியதாகவும் உஷோஷி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அப்போது தான் எடுத்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

அருகில் காவல் நிலையம் இருந்தும் போலீசார் உதவிக்கு வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள உஷோஷி, வெகு தாமதமாக வந்த போலீசாரை, அந்த நபர்கள் அவர்களை தள்ளி விட்டுத் தப்பியோடியதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வீடியோ அடிப்படையில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

0 Comments

Write A Comment