Tamil Sanjikai

கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு, தென் தமிழக கடலோர பகுதிகளில் லேசான அல்லது மிதமான அளவில் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது. வங்ககடலில் ஏற்பட்டுள்ள தொலைத்தூர சலனங்களால், திங்கட்கிழமை இரவு வரை வழக்கத்தை விட 2 மீட்டர் அளவிற்கு கடல் அலைகள் உயர்ந்து காணப்படும் என்றும், இதனால், தென் தமிழக பகுதி மீனவர்கள், பாதுகாப்பாக கடலுக்குள் செல்லுமாறு, வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த 24 மணி நேரத்தில், குறிப்பிட கூடிய அளவில், எங்கும், மழை பதிவாக வில்லை என்றும் கூறியுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் தெளிவாக இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

0 Comments

Write A Comment