யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியும் வகையில் ஒப்புகைச் சீட்டு கருவியை, அனைத்து மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்திலும் பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசும், தலைமைத் தேர்தல் ஆணையமும் பதிலளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தலின்போது, யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்து, உறுதி செய்வதற்காக, ஒப்புகைச் சீட்டு கருவி பயன்படுத்தப்படுகிறது.
தற்போது குறைந்த அளவிலேயே ஒப்புகைச் சீட்டு கருவி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வரும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடனும் ஒப்புகைச் சீட்டு பொருத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக, மத்திய அரசு மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்துள்ளது
0 Comments