Tamil Sanjikai

கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் பொதுச் செயலாளரும், அவரது சகோதரியான பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது,

5 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அரசு ஒரு பெரிய பெரும்பான்மையுடன் அதிகாரத்திற்கு வந்தது. நாட்டு மக்கள் பாஜக மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர். ஆனால் அந்த அரசு அதிகாரத்திற்கு வந்தது முதல் நாட்டிற்கு நம்பிக்கை துரோகம் செய்ய ஆரம்பித்தது. கலாச்சாரத்தில் மாறுபட்ட மக்களை பிரித்தாள நினைக்கிறார்கள். பாஜக ஆட்சியின் 5 வருடத்தில் நாடு எந்த வளர்ச்சியைம் அடையவில்லை என்பதற்கு சாட்சிகள் உள்ளன.

பழங்குடி மக்களின் கலாச்சாரம், வயநாடு மக்களின் கலாச்சாரத்தை உணர்கிறேன். தமிழகம், உ.பி., குஜராத் அனைத்தும் எனது மாநிலமே. அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார் என கூறினார்.

0 Comments

Write A Comment