Tamil Sanjikai

இந்தியாவில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதால் அந்த முறையை ரத்து செய்துவிட்டு மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வரும் சட்டமன்ற தேர்தல்களிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் மின்னணு வாக்கு எந்திரத்திற்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிடக் கோரி நியாய பூமி என்ற தனியார் தொண்டு நிறுவனம் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். எந்த சிஸ்டமாக இருந்தாலும், எந்த எந்திரமாக இருந்தாலும் அவற்றை முறையாகவோ அல்லது முறைகேடாகவோ பயன்படுத்த முடியும். மேலும் எல்லாவற்றைப் பற்றியும் சந்தேகங்கள் இருக்கத்தான் செய்யும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment