Tamil Sanjikai

அமெரிக்க இராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்பால் இயக்கப்பட்ட எம்.கியு-9 டிரோன் ஏமன் நாட்டின் தலைநகரான சானாவில் நிலத்திலிருந்து ஆகாயத்தை தாக்கும் ஏவுகணையால் சுட்டுவீழ்த்தப்பட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரான் அரசு ஹொத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆழில்லா விமானத்தை தாக்கிய ஏவுகணையைக் கொடுத்ததாக நம்புகின்றனர் என சி.என்.என் ஊடகத்திடம் அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

ஹொத்தி கிளர்ச்சியாளர்கள் அந்த ஆழில்லா விமானம் இராணுவ வான் பாதுகாப்பு ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று கூறினர். ஹொத்தி செய்தித்தொடர்பாளர் தாக்கிய ஏவுகணை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது தான் என்பதை தெரிவித்தார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ஆழில்லா விமானம் கடந்த ஜீன் மாதம் சுட்டு வீழ்த்தப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்க வழிவகுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments

Write A Comment