மும்பை நட்சத்திர விடுதி ஒன்றில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட, பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி நபர் ஒருவரையும், அவரது உதவியாளரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மும்பையிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர், அப்போது ஆன்லைன் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஹாங்காங்கில் வசித்து வரும் இருவரும் பிரிட்டன் நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் என்பதும், அவர்களுள் ஒருவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
மேலும் கடந்த மார்ச் மாதம் ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய போது, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காகவே இருவரும் இந்தியா வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
0 Comments