Tamil Sanjikai

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களின் படகுகள் மீது தங்களது கப்பலால் மோதி சேதப்படுத்திய இலங்கை கடற்படை, மீன்பிடிக்க சென்ற 28 மீனவர்களையும் கைது செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை வலைகளை அறுத்து விட்டும் படகுகள் மீது கப்பலால் மோதியும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

20 மீனவர்கள் நடுக்கடலில் கைது செய்ததுடன். அவர்களிடமிருந்து 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். அவர்களை வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரின் படகில் இருந்து 117 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாக, இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

காரைநகர் கடற்படை முகாமில் வைத்து, மீனவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும், இலங்கை கடற்படையினர் கூறியுள்ளனர்.

0 Comments

Write A Comment