புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 263 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொது அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க ஆயிரக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் 1,022 இடங்களில் போக்குவரத்துத் தடுப்பு அரண்களும் 162 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. போலீசாரின் பாதுகாப்பு அதிகமாக இருந்த இந்தப் பகுதிகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 263 பேர் போலீசிடம் பிடிபட்டனர்.
இதனையடுத்து ஏற்கெனவே அறிவித்திறந்தபடி அவர்களின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 263 பேரின் ஓட்டுநர் உரிமங்களையும் ரத்து செய்துள்ளனர்.
0 Comments