Tamil Sanjikai

தாய்லாந்து நாட்டில் 6 வயது சிறுவனுக்கும் சிறுமிக்கு நடைபெற்ற வினோத திருமணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் தற்போது குழந்தைத் திருமணங்கள் சட்டத்திற்கு விரோதமானது என கூறப்பட்டு வரும் நிலையில் தாய்லாந்து நாட்டில் 6 வயது சிறுவனுக்கும் சிறுமிக்கு நடைபெற்ற வினோத திருமணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாங்காக்கைச் சேர்ந்த அமோர்னசன் என்பவரின் 6 வயது மகனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

சிறுவனும், சிறுமியும் கடந்த ஜென்மத்தில் காதலர்களாக இருந்து பிரிந்ததால் தற்போது இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மணமகனுக்கு வரதட்சணையாக 2 லட்சம் பர்கத்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வினோத திருமணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது ஒருபுறமிருக்க, அதற்கு சிறுவர்களின் பெற்றோர் கூறிய காரணம் அதை விட அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

0 Comments

Write A Comment