Tamil Sanjikai

ஓசூர் மற்றும் நாகர்கோவில் நகராட்சிகளை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட முன்வடிவுகள் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தற்போது 12 மாநராட்சிகள் உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகராட்சியை மாநராட்சியாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட முன்வடிவை உள்ளாட்சி துறை அமைச்சர் எ.பி.வேலுமணி இன்று சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றால் நாளை குரல்வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். அதன் மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 14 ஆக உயரும். அதே போன்று 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிகள் இரண்டாம் திருத்த சட்ட முன்வடிவு மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்த சட்ட முன்வடிவுகளையும் அமைச்சர் வேலுமணி இன்று தாக்கல் செய்ய இருக்கிறார்.

0 Comments

Write A Comment