Tamil Sanjikai

காஷ்மீர் மாநிலம் பட்காமில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை இந்திய ராணுவம் மும்முரமாக மேற்கொண்டது. இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் 2 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து, உயிரிழந்த பயங்கரவாதிகளிடம் இருந்து அமெரிக்க தயாரிப்பு எம் 4 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவுகிறது என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டும் இதுபோன்ற எம் 4 ரக துப்பாக்கியை இந்திய ராணுவம் பறிமுதல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment