Tamil Sanjikai

திருவனந்தபுரம் அருகே அட்டகுளங்கரை பகுதியில் பெண்கள் சிறை ஓன்று உள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தியாவும், ஷில்பாவும் மாயமானது தெரிய வந்தது.

சிறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மாலை 4.30 மணிக்கு அந்த 2 பெண் கைதிகளும் குளியல் அறை பகுதிக்கு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.அந்த பகுதியில்தான் ஜெயிலில் சேரும் குப்பை கூழங்களை சுவர் அருகே கொட்டி வைப்பார்கள். இதனால் அந்த பகுதி மேடாக காட்சி அளிக்கும். இதை பயன்படுத்தி பெண் கைதிகள் இருவரும் ஜெயில் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

0 Comments

Write A Comment