Tamil Sanjikai

அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு அக்.,21 -ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகின்றன. பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதால் இழுப்பறி நீடிக்கிறது. இதர கட்சிகள் 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் அரியானா சட்டப்பேரவை தேர்தலில் பின்னடைவை சந்தித்ததை தொடர்ந்து பாஜனதா கட்சியின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து சுபாஷ் பாராலா ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.

இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்த பொது கூறியது

தேர்தலில் பின்னடைவை சந்தித்ததை தொடர்ந்து கட்சியின் பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது. தொடர்ந்து கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறேன். ராஜினாமா செய்ததாக கூறும் தகவல் பொய்யானது என்றார்.

0 Comments

Write A Comment