நாளை பணிக்கு மருத்துவர்கள் திரும்பாவிடில் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், எங்கள் போராட்டம் தொடரும் என்று அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை அறிவித்துள்ளது. மருத்துவர்களின் போராட்டத்தை மக்களுக்கு எதிரான போராட்டமாக பார்க்க வேண்டாம் என்றும் கூட்டமைப்பு விளக்கமளித்துள்ளது.
ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்பக் கோரி மருத்துவர்கள் 6ஆவது நாளாக அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
0 Comments