Tamil Sanjikai

5-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது!

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இந்த மோதல் உச்சத்தை எட்டிவந்த நிலையில் கடந்த வாரம், விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து அதிரடியாக அதிபர் சிறிசேனா நீக்கிய , முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராகவும் நியமித்தார்.

அதிபர் சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் அதிபர் சிறிசேனாவின் நடவடிக்கையை கண்டித்து கொழும்பு நகரின் பல இடங்களில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சித் தொண்டர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிபர் சிறிசேனாவின் உருவ பொம்மையை ஊர்வலத்தில் சிலர் எடுத்து வந்தனர். இந்த பரபரப்பான சூழலுக்கு பின் இலங்கை நாடாளுமன்றம் வரும் நவம்பர் 16-ம் தேதி முடக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.

இதனால், இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இலங்கையில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதனிடையே இலங்கையில் போராட்டமும் வலுப்பெற்றது. இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு, அதிபர் சிறிசேனாவுக்கு சபாநாயகர் கரு. ஜெயசூரியா நேற்று கடிதம் எழுதினார்.

இந்த சூழலில், இலங்கை நாடாளுமன்ற முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது. வரும் 5-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று இலங்கை பிரதமர் ராஜபக்சே அறிவித்துள்ளார். அதிபர் சிறிசேனா அறிவித்ததாக மகிந்த ராஜபக்சே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment