Tamil Sanjikai

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து பிரதமர் மோடி, விழா முடிந்த பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நடந்த பொது குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்பொழுது, ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஏழை, எளிய மக்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

ஆரோக்கியத்தை மேம்படுத்த தூய்மை இந்தியா திட்டம் மக்களிடம் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. நாடு முழுவதும் 9 கோடி கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 47 லட்சம் கழிப்பறைகள் கட்டி தரப்பட்டு உள்ளன.

கப்பல் போக்குவரத்தில் முக்கிய துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்தப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக உள்கட்டமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எங்களது அரசு தேசிய நெடுஞ்சாலை, விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளை மேம்படுத்தி வருகிறோம் என பேசியுள்ளார்.

0 Comments

Write A Comment