Tamil Sanjikai

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொள்ளையன் என நினைத்து தாக்கப்பட்ட வடமாநிலத்தவர் உயிரிழந்தார்.

கேசவன் புதூரை சேர்ந்த கலாநாதன் என்பவரது வீட்டின் கதவை, அதிகாலையில் வடமாநிலத்தை சேர்ந்த மூன்று பேர் தட்டியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் அவர்களை தாக்க முயன்றுள்ளனர். அப்போது பயத்தில் தப்பியோடிய மூவரையும் துரத்திச் சென்றனர், அப்போது குஜனன் கர்பாலியா என்பவர மட்டும் அவர்களிடம் சிக்கினான், அவனை பிடித்து மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் மயங்கி விழுந்த வடமாநிலத்தவர் அங்கேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அருகில் உள்ள கிணற்றில் அவனது உடலை வீசிவிட்டு சேந்தனார், வீசப்பட்ட உடலை மீட்ட கே.வி.குப்பம் போலீசார், தாக்குதல் தொடர்பாக மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Write A Comment