Tamil Sanjikai

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. அந்த வகையில், தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளன.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.41 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.72 காசுகளாகவும் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே கோபம் கலந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment