கடந்த 2013 -ம் ஆண்டு, இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் சமந்தா இணைந்து நடித்த அத்திரண்டிகி தாரேதி’ என்ற வெளியானது. இந்தப் படம் அதிக வசூலை குவித்து சாதனை படைத்தது. மேலும் 4 நந்தி விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தை கன்னடம் மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்தப் படத்தை சுந்தர்.சி தமிழில் இயக்குக்கிறார். அதில் நடிகர் சிம்பு நடிக்கிறார்.
"வந்தா ராஜாவாதான் வருவேன்" என்று பெயரிடப் பட்ட இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. இதில் மகத் மற்றும் கேத்ரின் தெரேசா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நடிகர் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் போடப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை தயாரிப்பாளர் சங்கம் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. சினிமா வட்டாரத்தில் தொடர்ந்து சிம்புவை சுற்றி பரபரப்புகள் கிளம்பிக் கொண்டுதான் இருக்கின்றன.
0 Comments