Tamil Sanjikai

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருக்கிறார். தோனி அவ்வப்போது ராணுவ வீரர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். உலகக்கோப்பை தோல்விக்குப் பின் தோனியின் ஓய்வு தொடர்பாக பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதில் தோனிக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் ராணுவ குழுவுடன் பயிற்சியை மேற்கொள்ள தோனி அனுமதியை கேட்டிருந்ததாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற தோனிக்கு ராணுவ தளபதி அனுமதி வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்களுடன் அவர் பயிற்சி பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் ஜம்மு காஷ்மீரின் ஒருபகுதியில் பயிற்சியை பெறலாம் என கூறப்படுகிறது. ஆனால் ராணுவ நடவடிக்கையில் அவர் பங்குபெற அனுமதி வழங்கப்படாது எனவும் ராணுவ தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 Comments

Write A Comment