Tamil Sanjikai

எஸ்.பி.ஐ. வங்கியிடம் இருந்து ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கான முயற்சியில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தொடர்ந்து மூன்று காலாண்டுகளிலும் தலா ஆயிரம் கோடி ரூபாய் நட்டத்தை சந்தித்துவருவதாகவும் அதனால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது . இந்த நிலையில், ஊதியப் பிரச்சனையை சமாளிக்கவும், நிறுவனத்தை தொடர்ந்து செயல்பட வைப்பதற்காகவும், எஸ்.பி.ஐ. வங்கியிடம் ஜெட் ஏர்வேஸ் , ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் கேட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெட் ஏர்வேஸ் வாங்கும் கடனுக்கு, அந்நிறுவனத்தின் பங்குதாரரான எத்திஹாட் உறுதி அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

0 Comments

Write A Comment