Tamil Sanjikai

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பல கோடி ரூபாய் குட்கா ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

சி.பி.ஐ. விசாரித்து வரும் இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. தொடர்ந்து அவரது உதவியாளர் சரவணனிடம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 6 பேர் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், இன்று பிற்பகல் நேரில் ஆஜராக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment