Tamil Sanjikai

இந்தியாவுக்குள் கடந்த 27ந்தேதி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமான படையினர் தடுத்து நிறுத்தப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். மேலும் அவர்களது எப் 16 ரக ஜெட் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த நிலையில், லண்டனை சேர்ந்த வழக்கறிஞரான காலித் உமர் என்பவர் வெளியிட்டுள்ள தகவலில், கற்பனையை விட சில சமயங்களில் உண்மை வேறுபடுகிறது. பாகிஸ்தானின் எப் 16 ரக ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபொழுது அது ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்துள்ளது. அதில் இருந்த ஷாஜாஸ் உத்தீன் என்ற விமானி வெளியே வந்துள்ளார். காயமடைந்திருந்த அவர் உயிருடனேயே இருந்துள்ளார்.

அவரை இந்தியர் என நினைத்து அங்கு கூடியிருந்த கும்பல் இரக்கமின்றி அடித்து தாக்கியுள்ளது. பின்னர் அவர் தங்கள் சொந்த நாட்டுக்காரர் தான் என அறிந்ததும் விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் ஆனால் எந்த பலனுமின்றி அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.

கடந்த 27ந்தேதி பாகிஸ்தான் ராணுவமும், 2 இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்றும் 2 விமானிகள் சிறை பிடிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தது.

அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும் பேசும்பொழுது, 2 இந்திய விமானிகள் ராணுவத்திடம் சிக்கி உள்ளனர் என கூறினார். அதன்பின் ஒரு விமானி என கூறினர். இந்திய வெளியுறவு அமைச்சகமும் ஒரு விமானியை காணவில்லை என தெரிவித்திருந்தது.

பாகிஸ்தானின் எப் 16 விமானத்தின் விமானியான ஷாஜாஸ் மற்றும் அபிநந்தனுக்கும் இடையே ஓர் ஒற்றுமை உள்ளது. அபிநந்தனை போன்று ஷாஜாசின் தந்தையும் அந்நாட்டு விமான படையின் முன்னாள் அதிகாரி ஆவார்.

0 Comments

Write A Comment