Tamil Sanjikai

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் பிரதமர் நரேந்திர மோடியும் பிஜேபி தலைவர் அமித் ஷாவும் நாட்டின் பொருளாதாரத்தையும் அதன் ஒற்றுமையையும் அழித்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார.

இதனைத் தடுக்க வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தாம் விரும்பியதாகவும் அதற்காகவே அக்கட்சிக்கு அழைப்பு விடுத்ததாகவும் கெஜ்ரிவால் கூறினார். ஆனால் காங்கிரஸ் கட்சி தரப்பில் அதற்கான கதவுகள் மூடப்பட்டு விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே ஆம் ஆத்மி கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கைத் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment