Tamil Sanjikai

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகச்சாமி ஆணையம், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம், கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேரில் சென்று விசாரிக்க அனுமதி பெற்றுத் தருமாறு தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஏற்கனவே கர்நாடக சிறைத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், தற்போது சசிகலாவை நேரடியாக சென்று விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதன் அடிப்படையில், தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு ஆறுமுகசாமி ஆணையம் இந்த கடிதத்தை எழுதியுள்ளது.

இதனிடையே, பரப்பன அக்ரகாரம் சிறையிலிருக்கும் சசிகலாவிடம் வரும் டிசம்பர் 13, 14 ஆகிய நாட்களில் விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Write A Comment