தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது..
இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் அடுத்த இரண்டு இரவுகளுக்கு உறை பனி நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments