Tamil Sanjikai

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கேரள பிரிவு தலைவர் ரஷீத் அப்துல்லா ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு தனது மனைவி உள்ளிட்ட 21 பேருடன் ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களைக் கவரும் வகையில் அவர் டெலிகிராம் செயலி மூலம் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக எந்த ஒரு வீடியோக்களும் வெளியாகாததையடுத்து அவரது நிலை குறித்து கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ரஷீத் அப்துல்லா உட்பட மூன்று இந்தியர்கள், 2 இந்திய பெண்கள், 4 குழந்தைகள் அமெரிக்கப்படையின் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக ஐ.எஸ். டெலிகிராம் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment