தெலங்கானா மாநிலத்தில் பெண் வன அதிகாரி ஒருவரை எம்.எல்.ஏ.வின் சகோதரரும், அவருடைய ஆட்களும் கம்பால் அடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் உள்ள ஆசிப்பாபாத் மாவட்டத்தில் உள்ள சிர்புர் கிராமத்தில் வன அதிகாரிகள் இன்று மரக்கன்று நடும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு, டிஆர்எஸ் கட்சியினர் ஆக்கிரமித்திருந்த நிலப் பகுதியில் வனத் துறையினர் மரக்கன்றுகளை நட முயன்றனர்.
அப்பாேது, டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ கோனேறு கொன்னபாவின் சகோதரர் கிருஷ்ணா என்பவர் உள்பட அவரது ஆதரவாளர்கள் வனத்துறையை சேர்ந்த பெண் அதிகாரி அனிதா உள்பட வனத் துறையினரை கண்மூடித்தனமாக கம்புகளால் தாக்கினர்.
இதில் காயமடைந்த வன அதிகாரி உள்ளிட்டோர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணா அப்பகுதியில் ஜில்லா பரிஷத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments