Tamil Sanjikai

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடர்பாக தெஹல்கா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உட்பட மூன்று பேர் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வீடியோ ஆதாரத்தை வெளியிட்டனர்.

சர்ச்சைக்குரிய வீடியோ வெளியான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்தனர். தமிழகம் கொண்டுவரப்பட்ட அவர்கள், சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்புதல், அவதூறை பரப்பி விரோதத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் 2 பேர் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடுத்த வழக்கில் சயன் மற்றும் மனோஜூக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்

0 Comments

Write A Comment