Tamil Sanjikai

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனி மாவட்ட கிராமத்தில் உள்ள கண்மாயை தூர்வாரும் செலவை தானே ஏற்றுக்கொண்டுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பாப்பிரெட்டிப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள கண்மாயை தூர்வாருவதற்கான செலவுகளை தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கண்மாயை தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டார், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் உடனிருந்தனர்.

மேலும் கண்மாயைச் சுற்றி மரக்கன்று நடும் பணியையும் துணை முதல்வர் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் தேனி மக்களவைத் தொகுதி எம்.பி ரவீந்திரநாத் குமார் ஆவார்.

0 Comments

Write A Comment