Tamil Sanjikai

வெனிசுலாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய ராணுவ ஒத்திகையை நடத்த அந்நாட்டு அதிபர் மதுரோ முடிவு செய்துள்ளார்.

அந்நாட்டின் இறையாண்மை, எல்லைகள் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான போக்கு ஆகியவற்றைக் காப்பாற்ற ராணுவத்தின் முழு ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்த அதிபர் மதுரா, இதற்காக ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி சில ஆயுதங்களின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

ஏற்கனவே பொருளாதாரப் பிரச்னைகளில் சிக்கி பெரும் சிக்கலை சந்தித்து வரும் வேளையில், அதிபரின் இந்த அறிவிப்பு அந்நாட்டு மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Write A Comment