Tamil Sanjikai

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக இருந்து வெளியேறிய நடிகை மதுமிதா விஜய் டிவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இன் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா தன்னை தானே வருத்திக்கொண்டதால் சில வாரங்களுக்கு முன்பாக நிகழ்ச்சியின் விதிமுறைகளை மீறி அவர் செயல்பட்டதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட தாக காரணம் தெரிவிக்கப்பட்டது.

வெளியே வந்த அவர் விஜய் டிவி நிர்வாகி ஒருவரிடம், 'சம்பள பாக்கியை விரைவில் தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்' என மெசேஜ் அனுப்பியதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், இந்த புகார் பொய்யானது என்று அவர் மறுப்பு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மதுமிதா நாசரேத் பேட்டை காவல் நிலையத்தில் தபால் மூலம் புகார் அளித்துள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப் படுத்தியதாகவும், இதனை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலஹாசன் கண்டிக்கவில்லை என்றும், தான் மன உளைச்சலுக்கு ஆளாகி, வலுக்கட்டாயமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment