Tamil Sanjikai

கோவையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தனது குடும்பத்துடன் கூலித்தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், தமது வீட்டிலேயே ஆடுகள் மற்றும் நாய்கள் வளர்த்து அவற்றை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். அவரது வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டி குடியேறிய காவல்துறை அதிகாரி ஒருவர், ஆடுகள் மற்றும் நாய் வளர்ப்பினால் சிரமம் ஏற்படுவதாகவும், எனவே, அவற்றை அங்கு வைத்திருக்கக் கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகார் அளித்தால், போலீசார் தம் மீதே நடவடிக்கை எடுப்பார்கள் என செல்வராஜ் அஞ்சியுள்ளார். இந்நிலையில், தமது மனைவி மற்றும் 2 மகள்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், பெட்ரோல் ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். பொதுமக்களும், போலீசாரும் அவர்களை தடுத்து காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Write A Comment